;
Athirady Tamil News

லண்டனில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள் !!

பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கான உளவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஹரோ பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தமை அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட உளவாளிகள்…

முதல் மனைவியை விவாகரத்து செய்யாத ஆத்திரம்: காதலனின் மகனை கொன்று பெட்டியில் அடைத்த…

மேற்கு புதுடெல்லியில் உள்ள ரன்ஹோலா பகுதியில் வசித்து வந்தவர் பூஜா குமாரி (24). இவர் ஜிதேந்திரா என்பவருடன் லிவ்-இன் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார். ஜிதேந்திரா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு திவ்யான்ஷ் (11) எனும் ஒரு மகன் உண்டு.…

2030 இற்குள் புகைப்பழக்கத்தை முற்றாக ஒழிக்க இங்கிலாந்து அரசு தீர்மானம் !!

இங்கிலாந்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புகைப்பழக்கத்தின் காரணமாக…

நிலச்சரிவால் வீடுகள், கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன- பலி எண்ணிக்கை 66-ஐ தாண்டியது!!

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மலை மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி வருகிறது. இமாச்சல்பிரதேசத்தில் கடந்த…

ஆப்கானிஸ்தானில் இரண்டாம் ஆண்டு வெற்றியைக் கொண்டாடிய தலிபான்கள் !!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி நேற்றுடன் (15) இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.…

சொல்லாட்சியை தாண்டி எப்போது பயணிப்பீர்கள்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ்…

இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.…

மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்து 25 தொழிலாளர்கள் பலி!!

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழைக் காலங்களில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படும். ஆனால்…

கொள்ளையடிக்கப்பட்ட 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது- காங்கிரஸ்…

மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "…

இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள்…

வைரலான மும்பை வாலிபரின் காபி கடை…!!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் கூட தங்களது சில நேரங்களில் வித்தியாசமான விளம்பரங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த மயங்க் பாண்டே என்பவரது காபி கடை மும்பையில்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னாள் பிரதி அதிபர் செல்லத்துரை குமாரசாமி காலமானார்!!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னாள் பிரதி அதிபர் சங்கீத பூஷணம் செல்லத்துரை குமாரசாமி (SLEAS) (வயது 73) இன்று 16.08.2023 புதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார். 10.01.1951 இல் பிறந்த இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசை துறை…

சூப்பர் மார்க்கெட்டில் கூடைக்குள் கிடந்த ராட்சத பாம்பு- வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

ராட்சத பாம்புகளை வனப்பகுதிகள், பூங்காக்களில் தவிர்த்து பொது இடங்கள் அல்லது வீடுகளில் கண்டால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் பெரிய வணிக வளாகத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்குள் ராட்சத…

மன்னார் மாவட்ட வனங்கள் மற்றும் சதுப்புநில கண்டல் வலயம் பாதுகாக்கப்படுமா?

மன்னார் மாவட்டமானது வன்னித்தேர்தல் தொகுதியிலுள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். மன்னார் மாவட்டம் வெளிநாட்டு ஏற்றுமதி வருமாணத்தினை ஈட்டுக்கொடுக்கும் வளமிகு மாவட்டம் என்பதுடன் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் வேளான்மை, கடற்தொழில்,…

சமூக வலைதளம் மூலம் 15 வருட தோழியை தேடி பிடித்த பெண்!!

தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண் தனது 15 வருட தோழியை தேடி பிடித்துள்ளார். வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.…

பிரான்சில் ஈபிள் கோபுரத்தில் போதையில் தூங்கிய சுற்றுலா பயணிகள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப்…

செல்போனில் வீடியோக்களை பார்க்கும் குரங்கு!!

இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் கொட்டி கிடந்தாலும் அவற்றில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ஒரு குரங்கு கட்டிலில் அமர்ந்து சமூக வலைதளத்தில் பரவும் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது போன்ற ஒரு…

விளையாட்டாகத்தான் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்தேன்: எலான் மஸ்க்!!

செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர். Powered By இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க்…

கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல்!!

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது:- நான் கங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 650-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் கங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்பு பணி…

கையில் இருந்தது பேனா.. அவசரத்தில் பெண் காவலர் எடுத்த முடிவால் பலியான உயிர்!!

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36). இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும். அவர்களுக்குள் ஏதோ தகராறு…

மும்பை உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் செத்த எலி- மேலாளர் உள்பட 3 பேர் கைது!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங்…

இடி அமீன் சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பியது ஏன்?!! (கட்டுரை)

1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என…

வட்டி கம்மிதான்.. ரூ. 1 லட்சம் வரை வாங்கிக்கோங்க – பிரதமரின் சூப்பர் திட்டம்!

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் விஸ்வகர்மா…

நைஜரில் நாட்டை காக்க முன்வரும் தன்னார்வலர்கள்: ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள திட்டம்!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதியின்…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை அனுப்புமாறு கம்பஹா பிரதேச செயலாளர் சுரங்கா குணதிலக்கவிற்கு நகர…

நல்லூர் மகோற்சவகால பஜனை!!

நல்லூர் மகோற்சவகால பஜனை நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின்…

ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கான விண்ணப்பம் கோரல்!!

2022/2023 ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருமாறு ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தகைமைகள், நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2021 இல் வெளியிடப்பட்ட அதிவிசேட…

சிறுத்தை வந்தா குச்சியால் விரட்டுங்க.. திருப்பதி தேவஸ்தானம் ‘வேற லெவல்’…

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி. இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.…

வைத்தியர் அஜித் மென்டிஸூக்கு புதிய பதவி!!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் சுகாதார அமைச்சரினால் இன்று(16) தமக்கு வழங்கப்பட்டதாக வைத்தியர் அஜித் மென்டிஸ் தெரிவித்தார்.

647,683 பேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!!

சிறுநீரக பாதிப்புடையவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியவர்கள் என 647,683 பேருக்கு, புதிய திட்டம் வரும்வரையில் கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு -பலர் பலி வாகனங்கள்,ஆயுத கிடங்குகள் தாக்கி…

உக்ரைன் படையினர் கடந்த நாள் (14) முழுவதும் தெற்கு உக்ரைனில் உள்ள டவ்ரியா போர்முனையில் நடத்திய தாக்குதலில் 99 ரஷ்ய வீரர்களைக் கொன்று 190 பேரை காயமடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டவ்ரியா செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி…

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் சுதந்திர தின தேநீர் விருந்து.. துணை ஜனாதிபதியுடன்…

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும். அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 15)…

ட்ரம்ப் உட்பட 19 பேர் சரணடைய உத்தரவு !!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் உட்பட 18 பேரை சரணடையுமாறு அமெரிக்க நீதிமன்றமொன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும்…