;
Athirady Tamil News
Daily Archives

3 October 2022

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் நாளை மகா தேரோட்டம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை…

இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து சீனாவுக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதனால்…

யாழ். புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் போதைப்பொருளுடன் கைது…

யாழில். கசிப்புடன் கைதான மாணவன் நீதிமன்ற உத்தரவில் சிறுவன் நன்னடத்தை பாடசாலையில்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான்…

விடுமுறை நாட்களை முன்னிட்டு ராகுல் காந்தி நடைபயணம் ரத்து..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை…

புதிய வாழ்க்கைமுறையை கற்றுக்கொள்வோம்!! (மருத்துவம்)

தொற்றுநோய் தொடர்ந்து பரவி வரும் இந்த சூழலில் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். நீரிழிவு…

வளர்ப்பு சிறுத்தைகளுடன் உக்ரைனில் தவிக்கும் ஆந்திர டாக்டர்..!!

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளை அன்புடன் அழைத்து வந்ததாக பல கதைகள் உள்ளன. இருப்பினும், ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது 2 செல்லப் பிராணிகளான சிறுத்தை மற்றும் கரு…

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரோட்டம் நடந்தது..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக…

உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி- 42 பேர் படுகாயம்..!!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை நடைபெற்றது. இதற்காக, பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று துர்கா பூஜையில் 300 பேர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், பந்தலில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து…

தங்கையை கிண்டல் செய்த வாலிபரை 50 முறை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்..!!

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் நந்தா என்ற நந்தன்(வயது 21). அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன். இந்த நிலையில் தர்ஷனின் தங்கையை நந்தா அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தர்ஷனிடம் தெரிவிக்க…

குஜராத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி.. இமாசலபிரதேசத்திலும் அதிகாரத்தை தக்கவைக்கிறது..!!

குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பகுதி, எதிர்வரும் இம்மாதம் 6ஆம்;, 7ஆம் , 8ஆம்; திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி…

குளிர்பானம் அருந்திய மாணவனின் 2 சிறுநீரகங்கள் செயலிழப்பு !!

குளிர்பானம் குடித்த மாணவன் தொண்டை, குடல், இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர்…

எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் !!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் (04) எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, இன்று (03) பிற்பகல்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: தீர்ப்பாயத்தின் அறிவிப்பு !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 24ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்ற தீர்ப்பாயம், இன்று (03) திகதி நிர்ணயித்தது. ஈஸ்டர் தாக்குதலுக்கு சதி…

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா பாற்குடபவணி இன்று இடம்பெற்றது. மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த…

சாய்ந்தமருது கடற்கரை சடலம்-மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!! (வீடியோ, படங்கள்)

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) காலை 40 வயது…

4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை: தமிழகத்தில் 489 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் நேற்று புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 101 பேர், செங்கல்பட்டில் 44 பேர், கோவையில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம்,…

கோதுமை மாவின் விலை குறைக்கப்படும்!!

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோதுமை மாவு கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும்…

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஆபத்தில்!!

மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு…

ரூ. 532 கோடி வரி ஏய்ப்பு: அலோசியஸுக்கு பிணை!!

532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு…

பணவீக்கம், எரிபொருள் தட்டுப்பாடே காரணம்!!

ஆசியாவின் அதிகூடிய பணவீக்க விகிதம் மற்றும் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை, இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த உலக உணவுத் திட்டம், நகர்ப்புற ஏழைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களைப் போலவே பெண்…

இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வு!!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டு நாணய மாற்று விகிதங்களுக்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மாறாமல் உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க…

சென்னை ஈ.வே.ரா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் – போக்குவரத்து போலீசார்…

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- ஈ.வெ.ரா. சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில் பர்னபி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்ரமித்து இன்று (3-ந் தேதி) இரவு 10…

154-வது பிறந்தநாள்: காந்தி சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காந்தியின் 154-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் உருவப்படமும் வைக்கப்பட்டு இருந்தது.…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன்…

மண்சரிவில் சிக்கி பெண் பலி!!

திம்புள்ளபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று(3) அதிகாலை பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா என்ற மூன்று…

சந்திரசேகர ராவ் தேசிய கட்சி தொடங்குவது எப்போது? – புதிய தகவல்கள்..!!

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது. முதலில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின்…

’’ரணிலுக்கு உலகமே அஞ்சுகிறது’’ – வஜிர!!

சர்வதேச அமைப்புகளின் நோக்கங்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

பொலிகண்டியில் 217 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு…

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு…