“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)
தளபதி மாணிக்கதாசன் நினைவு நாளில் அன்னை திரேசா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
===================================================
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களினதும், அவருடன் இணைந்து வீரமரணமடைந்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினம் நேற்றுமுன்தினம் (02.09.2020) புலம்பெயர் “புளொட்” தோழர்களினால் இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் நினைவு கூறப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் யுத்தத்தின் பின்னரான குடியேற்ற கிராமங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கிராமம் “புதிய கற்பகபுரம்” கிராமமாகும். சுமார் 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி உள்ளார்கள், இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஓரளவு நிறைவேறியுள்ள நிலையில், குடியேறியவர்களில் அநேகர் நாளாந்த கூலித் தொழிலாளர்களே.
தகரத்தினால் அமைக்கப்பட்ட முன்பள்ளி கடந்த சில வருடங்களாக மிகதிறமையாக இயங்கி வருகிறது. இவ்வாறான இக்கிராமத்தின் அபிவிருத்திக்கு பலரின் பங்களிப்பு தேவையாகவுள்ளது. அந்த வகையில் அடுத்த வருடம் முதலாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொள்வதற்கு சில குடும்பங்கள் சிரமத்தை எதிர்கொண்டதை கேள்விப்பட்டு அம்மாணவர்களுக்கான கல்விக்கான கற்றல் உபகரணங்கள் அமரர் மாணிக்கதாசன் அவர்களின் 21ஆம் நினைவுநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே இவர்களுக்கான உதவி வழங்கப்பட்ட போது, மழை காரணமாக வராத சில மாணவர்களுக்கு இன்றையதினம் வழங்கப்பட்டது. அமரத்தவம் அடைந்த தோழர்கள் நினைவாக தமிழர் தாயகமெங்கும் பல்வேறு சமுக நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் இக்கிராம மக்களின் முன்பள்ளி சிறார்களுக்கு கல்விக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகப் பகுதியெங்கும் இவ்வாறான “வாழ்வாதார உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பராமரிப்பு இல்லங்களுக்கான உணவு வழங்கள், வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள், பாலர் பாடசாலைகளுக்கான உதவிகள்” என பல்வேறுபட்ட சமுகநல தொண்டுகள் “புளொட்” தோழர்களினால் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), வரதன் (சூரிச்), குமாரண்ணர் (சூரிச்), ஜெகண்ணர் (சூரிச்),பிரபா (சூரிச்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) ஆகியோருடன், தோழர்.குணபாலன் (கனடா), தோழர்.பாலா (லண்டன்), “மாணிக்கதாசன் பவுண்டேசன்” சார்பாக தோழர்.ரஞ்சன் (சுவிஸ்), தோழர்.தயாளன் (பிரான்ஸ்), தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.முகுந்தன் (லண்டன்), தோழர்.சூட்டி எனும் யூட் (ஜெர்மனி) ஆகியோர் பங்களித்து இருந்தனர்.
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபத்தோராவது நினைவு தினம்)
“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..! (படங்கள்)
மன்னாரில் “புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கல்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, மணிப்புரம் ஆனந்த இல்லத்துக்கு மூவேளை உணவு.. (படங்கள் & வீடியோ)
“புளொட்” தோழர்.இளங்கோவின் நினைவிடமும், பேருந்து நிலையமும் புனருத்தாணம்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “கற்குழி ஞானம் முன்பள்ளிக்கு” நிதியுதவி.. (படங்கள் & வீடியோ)
“புளொட்” மாணிக்கதாசன் நினைவாக, திருநாவற்குளம் கிராமத்தில் சிறப்பு நிகழ்வுகள்..! (படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் நினைவாக, “உலருணவுப் பொதி மற்றும் பணவுதவி” வழங்கல்..! (வீடியோ & படங்கள்)