;
Athirady Tamil News

சுவிஸ் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

சுவிஸ் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
#################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு வவுனியா அயல் கிராமமொன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுவிஸ் பேர்ண் எனும் பிரதேசத்தில் பிறந்து, சுவிஸ் லங்கெந்தால் எனுமிடத்தில் வசிக்கும் திருமதி.தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளாகிய இன்று தாயக சொந்தங்களுக்காக தனது பிறந்தநாளில் நல்லுதவிகள் வழங்க வேண்டுமென “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” தொடர்பு கொண்டு கேட்டதுக்கு இணங்க மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்த நாளை விசேசமாக ஒழுங்குபடுத்தி பிறந்தநாள் கேக் வெட்டி, பிறந்தநாள் பாட்டுப் பாடி மாணவமாணவிகள் தமது வாழ்த்தினைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்..

தனது பிறந்த நாளில் பலதரப்பட்ட சமூகப்பங்களிப்பை தமது தாயக உறவுகளுக்கு வழங்க விரும்பிய திருமதி தாரணி அவர்கள் தனது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பான பிறந்த நாளாக மாற்றிய சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்படி கேட்டுக் கொண்டதன்படி அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்தையன்கட்டு பிரதேசத்தில் மாவீரர் குடும்பத்திற்கு அவர்கள் ஏற்கனவே தையல் தொழில் செய்து வந்த வேளையில் தையல் இயந்திரம் பழுதடைந்த காரணத்தால் மாவீரரின் சகோதரி அவர்கள் காமென்ஸ் என சொல்லப்படும் பன்னாட்டு தையல் தொழிற்சாலைக்கு போய் வருகின்றார். இந்தக் குடும்பத்திற்கு திருமதி தாரணி சுவீதன் அவர்கள் புதிய தையல் இயந்திரம் வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்துள்ளார். விரைவில் நாட்டின் போக்குவரத்து சீரடைந்த பின் உடனடியாக மாவீர்ர் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக குறித்த தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு தனது பிறந்த நாளை முன்னிட்டு பலவிதமான சமூகப் பணிகளுடன் கல்விக்கான உதவிவியினையும் வழங்கியுள்ளார் திருமதி தாரணி சுவீதன் அவர்கள்.

நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் செயலிழந்து போயுள்ள நிலையில் அன்றாட சீவியத்துக்கே மிகவும் துன்பப்படும் நிலையில் இருக்கும் எமது கிராமத்து மாணவர்களுக்கு, தன்னுடைய பிறந்தநாளில் திருமதி தாரணி சுவீதன் அவர்கள் எமக்கு கற்றல் பொதிகள் தந்தமைக்கு மனப்பூர்வமான நன்றியினையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எமது சிறுவர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என கலந்து கொண்ட மாணவர்கள் சார்பில் பெற்றோர்கள் தெரிவித்தனர்..

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி தாரணி சுவீதன் அவர்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
29.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.