;
Athirady Tamil News

லண்டன் பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின், திருமண நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

லண்டன் பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் திருமண நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் திருமண நாளில் “M.F” ஊடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது..
##############################

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி (ரோகிணி) தம்பதிகளின் இன்றைய திருமண நன்நாளில் சிதம்பரபுரம் கிராமத்தில் வசிக்கும் பலதரப்பட்ட தேவைகளுடைய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் தலைவிரித்தாடும் உலக ரீதியான ஆட்கொல்லி நோயான கொரோனா தொற்று நோய் காரணமாக தாயகத்தில் வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டு அடுத்தவேளை உணவுக்கு கையேந்தும் நிலை வந்துவிட்ட சூழ்நிலையில் வாழும் அன்றாட உழைத்து வாழும் குடும்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு இன்றைய நாளில் திருமண நாளைக் கொண்டாடும் லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இன்று சிதம்பரபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் அமரத்துவ மடைந்தவர்களான அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியான லண்டனில் வசிக்கும் ரோகினி என அழைக்கப்படும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பி கேட்டுக் கொண்டதற்கமைய தம்பதிகளின் திருமண நாளான இன்று உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தங்களது திருமண நாளை தாயக உறவுகளின் பசியை போக்குவது மூலமாக சந்தோசம் காணும் லண்டனில் வாழும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளை தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளர்க இறையருளுடன் இன்புற்று வாழ்கவென என்று வாழ்த்துகிறது.

இன்றைய காலச் சூழ்நிலையில் இவ்வாறான நன்கொடையாளர்களின் ஆதரவினால் பல குடும்பங்கள் பட்டினிச் சாவிலிருந்து தப்பி வாழ்கின்றார்கள் என்பதே உண்மையிலும் உண்மை.. எனவே எமதுறவுகளே மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரோடு தாயக சொந்தங்களின் பசியை தீர்க்க பாடுபடுவோம், ஒன்றுபடுவோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.