;
Athirady Tamil News

மூன்றாம் கட்டமாக “அமரர் பூமணி” அன்னையின் நினைவாக, தொடரும் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

மூன்றாம் கட்டமாக “அமரர் பூமணி” அன்னையின் நினைவாக, தொடரும் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
############################

புங்குடுதீவு மண்ணில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த அன்னை பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக பல்வேறு தானதருமங்களை அன்னாரின் பிள்ளைகளான திரு.திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி குடும்பம், திரு.திருமதி. சச்சிதானந்தன் குடும்பம், திரு.திருமதி.சதானந்தன் குடும்பம், திரு.திருமதி. தயானந்தன் குடும்பம் ஆகிய குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் தந்தையார் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட தாயார் காணாமல் போன நிலையில் அநாதரவாக நின்ற ஐந்து பிள்ளைகளை மிகவும் வறிய நிலையில் பராமரித்து வசித்து வரும் மாவீரரின் பெற்றோரான திரு.பெருமாள் ஆறுமுகம் என்ற வயோதிப குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காக கோழிகளுடன் மிகப்பெரிய கோழிக் கூடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வறிய சூழ்நிலையில் வாழ்வோரை பல கிராமங்களில் தெரிவு செய்து அவர்களுக்கான வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வருகின்றனர்..

ஏற்கனவே வவுனியா பிரதேசத்தில் உள்ள வவுனியா கல்நாட்டினகுளம், மதுரா நகர், சிதம்பரபுரம், கற்குளம் போன்ற மிகவும் பின் தங்கிய கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் மீண்டும் இன்றைய நாளில் வவுனியா சிதம்பரபுரம், கல்மடு போன்ற மிகவும் பின் தங்கிய கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இச்செயற்பாட்டுக்கு சிதம்பரபுரம் கிராமத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் திரு.சஜீவன் எம்மோடு இணைந்து உதவி தேவைப்படும் குடும்பங்களை இனங்காட்டி ஒத்துழைப்பு தந்தார். அத்துடன் சிதம்பரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு.சௌந்தர் அவர்களை சந்திக்க ஒழுங்குபடுத்தினார்.

திரு. சௌந்தர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக குறித்த கிராமத்தில் செய்து வருகின்ற பணிகள் பற்றி, எம்மோடு கலந்துரையாடியதுடன் இனிவரும் காலத்தில் கிராமத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்குவதாக நம்பிக்கை தந்தார்.

இவ்வாறாக பல்வேறு சமூக நற்பணிகளை தாயக உறவுகளுக்கு வழங்கி தமது தாயாரான அமரர் அன்னை பூமணி அவர்களின் முப்பத்தியோராம் நாளை அன்னாரது குடும்பத்தினர் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அனுஸ்டித்தனர்.

அன்னை அமரர் பூமணி அவர்களின் ஆத்மசாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

தங்களது தாயாரின் நினைவு கூறலில் தாயகத்தில் வாழும் வறிய நிலையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி வழங்கியமைக்கு அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை ஆகியோருக்கும், இதுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து தந்த திரு.குழந்தை அவர்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக உறவுகளோடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அமரர் பூமணி அன்னையின் இறைசேர் வாழ்க்கையின் ஆத்ம சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு இறைவனை வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

26.07.2021

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவுகூரல்.. (படங்கள் வீடியோ)

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)

மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.