;
Athirady Tamil News

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.. (படங்கள் வீடியோ)

0

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.. (படங்கள் வீடியோ)
###########################################

யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் இராசாத்தி என எல்லோரும் பாசமாய் அன்புடன் அழைக்கப்பட்ட திருமதி தர்மலிங்கம் நாகேஷ்வரி அவர்களின் எட்டாமாண்டு நினைவுநாள் நேற்றையதினம் (31.10.2021) தாயகத்தில் பல்வேறு இடங்களில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.

“உளவிக்குளம் பிள்ளையாரின்” தீவிர பக்தையான அமரர் இராசாத்தி அவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்திப் பூசையும், அன்னதானமும் வழங்கப்பட்டு அமரர் இராசாத்தி அன்னையின் எட்டாமாண்டு ஆத்மசாந்தி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது..

கொட்டும் மழை காரணமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட அடியார்களின் சிரமத்தினை கருத்திற் கொண்டு அவர்களால் அமர்ந்திருந்து சாப்பிட இயலாத காரணத்தினால் ஒவ்வொரு அடியார்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்குமான உணவு பைகளில் நிரப்பி கொடுக்கப்பட்டது. பிரதான வீதியில் உள்ள ஆலயமென்பதால் வீதிகளில் பயணிப்போர்களும் ஆலயத்திற்கு வருகை தந்து உணவினைப் பெற்றுச் சென்றனர்..

அதேவேளை அமரர் இராசாத்தி அன்னையின் நினைவாக கிராமங்களிலும் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றுகூடிய மக்களுக்கு அன்னையின் நினைவாக பொதி செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது.

வவுனியா பாரதிபுரம் கிராமத்திலும், பம்பைமடு, கற்பகபுரம் மற்றும் புதிய கற்பகபுரம் ஆகிய கிராமங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் வருகை தந்த மக்கள் அன்னையின் ஆத்மசாந்தி பூசைகளில் ஈடுபட்டதுடன் பொதி செய்யப்பட்ட உணவினையும் பெற்றுச் சென்றனர்.

இவ்வாறாக பலதரப்பட்ட நாயக இடங்களில் அமரர் இராசாத்தி என அழைக்கப்பட்ட திருமதி நாகேஸ்வரி தர்மலிங்கம் அவர்களது நினைவாக ஆத்மசாந்தி நிகழ்வோடு விசேட மதிய உணவும். வழங்கப்பட்டது. இதேவேளை தீபாவளிக்கு முன்பாக அமரர் இராசாத்தி அவர்களின் நினைவாக “வாழ்வாதார உதவியாக” உலருணவுப் பொதிகள் முல்லைட்த்தீவு மாவடடத்தில் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த இராசாத்தி அன்னையின் நினைவாக பல்வேறு இடங்களில் நிகழ்வினை ஒழுங்கு படுத்தி சிறப்பான எட்டாமாண்டு நினைவினை நினைவு கூர்ந்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். அமரர் இராசாத்தி அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இறைவன் வேண்டுவதோடு இவ்வனைத்து நிகழ்வுகளுக்குமான நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவிப்பதோடு இவ்வாறான நிகரழ்வுகள் மூலமாக புலம்பெயர் சொந்தங்களோடு தாயக உறவுகளின் உறவுகள் பலப்படுத்நி வருகிறது என்பதும் சிறப்பான சம்பவமாகும்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.10.2021


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.