;
Athirady Tamil News

கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
############################################

யாழ்.சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பெர்னில் வசிப்பவர்களுமான திரு.திருமதி கலைச்செல்வன் (சிவா) தர்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி யஷ்ணவி இன்று தனது பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக சிறுவர் சிறுமிகளோடு மிக விமர்சையாக கொண்டாடினார்.

சுவிசில் வசிக்கும் யாழ் சரவணையைச் சேர்ந்த சிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி கலைச்செல்வன் தர்ஜினி தம்பதிகள் தங்களது செல்வப்புதல்வி யஷ்ணவியின் பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன் அவர்களோடு கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைய நாளில் செல்வி யஸ்ணவின் பிறந்தநாளை முன்னிட்டு தாயகத்தில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் பெருமாள் சஞ்சீவன் அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு மிகமிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மிக குறுகிய கால இடைவெளிக்குள் பிறந்த நாள் நிகழ்வு தொடர்பாக மன்றத்திடம் கேட்கப்பட்டதால் உடனடியாக வழ்வாதார உதவியான கோழிக் கூடும் கோழிகளும் வழங்க போதிய நாட்கள் போதாமையினால் செல்வி யஸ்ணவி பிறந்த நாளான இன்றையதினம் பெருமளவான சிறுவர் சிறுமிகளோடு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி யஸ்ணவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி சந்தோசமாக கொண்டாடப்பட்டது.

மிக விரைவில் யஸ்ணவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியான கோழிக்கூடும், கோழிகளும் பொருத்தமான பயனாளிக்கு வழங்கப்படும் .என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற செல்வி யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் வசதிக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி யஸ்ணவிக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நல்வாழ்த்தினையும் மகிழ்ச்சினையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இவற்றுக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கிய செல்வி. யஸ்ணவியின் பெற்றோர்களுக்கும் தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பனி மன்றம் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

08.11.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.