;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)
###########################################

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். திருமதி. தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாமாண்டு சிராரத்ததினம் கனடாவில் வதியும் அவரது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில், தாயக கிராமமொன்றில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் மதிய உணவு வழங்கி அன்னாரது சிரார்த்தத்தை நினைவுகூர்ந்த அன்னாரின் குடும்பத்தினர், சிரார்த்த நினைவு நாளில் கலந்து கொண்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி அனுஸ்டித்தனர்.

அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாமாண்டு ஆத்மசாந்தி ஆண்டு நிகழ்வை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக ஒழுங்குபடுத்திய அன்னாரது உறவினரும், எமது மன்றத்தின் சர்வதேச இணைப்பாளரும், கனடா “நம் தாயகம்” வியாபார குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான திரு குணராஜா உதயராஜா அவர்களின் ஏற்பாட்டில், கனடாவில் வதியும் அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் தாயகத்தில் நடைபெற்றது.

நீண்ட நாள் மழை பெய்து நேற்றைய தினம் சற்று மழை ஓய்ந்திருந்த போதிலும் இன்றைய நாள் காலையிலே மழை தூறத் தொடங்கியது.. இருப்பினும் மழை சற்று குறைவடைந்த நேரத்தில் அநேக மக்களும், மாணவர்களும் அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்நு சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆத்மசாந்தி நிகழ்வின் தொடக்கத்தில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு தீபமேற்றி, தீபராதனை செய்து, அமுது படைக்கப்பட்டு, மலரஞ்சலி செய்யப்பட்டதுடன், மாணவர்களால் தேவாரபாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டு நினைவுரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னாரின் நினைவாக வயோதிபத் தாயொருவருக்கு அமரர் புவனேஸ்வரி அன்னையின் நினைவாக தானம் வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவு வழங்கலைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை எமது மன்றத்தின் “மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சி கல்விக் கூடத்தின்” பொறுப்பாசிரியை திருமதி வேஜினி அவர்கள் வழங்கி தொடங்கி வைக்க, சிவபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியை ஜெயா அவர்கள், மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திருமதி பவளராணி நவரட்ணம், மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி சத்தியா ஆகியோர் மாணவர்களுகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இவ்வாறு பல்வேறு சமூகநலப் பணிகளோடு புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அன்னையின் மூன்றாமாண்டு சிரார்த்த தினம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக இடம்பெற்றது.

அமரத்துவமடைந்த அமரர் புவனேஸ்வரி அன்னையின் ஆத்ம சாந்திக்காக, தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இறைவனை வேண்டுவதோடு அன்னாரது சிரார்த்த நாளில் பல்வேறு சமூகநலப் பணிகளுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னையின் குடும்பத்தினருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
16.11.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.