;
Athirady Tamil News

“M.F” ஊடாக, புங்குடுதீவு அமரர்.சங்கரலிங்கத்தின் நினைவுநாள் நிகழ்வுகள்.. (படங்கள் வீடியோ)

0

“M.F” ஊடாக புங்குடுதீவு அமரர்.சங்கரலிங்கத்தின் நினைவுநாள் நிகழ்வுகள்.. (படங்கள் வீடியோ)

யாழ் புங்குடுதீவில் பிறந்து கனடாவில் அமரத்துவமான அமரர் நல்லதம்பி சங்கரலிங்கம் அவர்களது திவச சிரார்த்த தினம் தாயக கிராமத்து மக்களோடு அனுஷ்டிக்கப்பட்டது.

அமரர் நல்லதம்பி சங்கரலிங்கம் அமரத்துவமான பஞ்சமி திதி இன்றாகும். இந்நாளில் அன்னாரை நினைவுகூறும் வகையில் அமரர் நல்லதம்பி சங்கரலிங்கம் அவர்களது குடும்பத்தினரான திருமதி.சத்தியவதி சங்கரலிங்கம் மற்றும் அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் வழங்கிய நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா கிராமமொன்றில் ஆத்மசாந்தி பூசையும் தானமும் கொடுக்கப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட்டது.

முன்னதாக அமரத்துவமடைந்த நல்லதம்பி சங்கரலிங்கம் அவர்களின் பஞ்சமி திதியினை முன்னிட்டு இன்று அதிகாலை வேளையில் வவுனியா குளுமாட்டுச் சந்தி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பூசை பிரத்தியேகமாக நடாத்தப்பட்டு நெய் விளக்கேற்றி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வவுனியா பிரதேசத்தில் வறிய கிராமத்தில் வாழும் மக்களுக்கு அன்னாரின் நினைவாக அவர்களது குடும்பத்தின் பங்களிப்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆத்மசாந்தி நிகழ்வின் தொடக்கத்தில் தேவாரபாராயணம் பாடப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டு முதியவர் ஒருவருக்கு திதி தானம் வழங்கப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிரார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அத்தோடு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத வயோதிபர்கள், சிறுவர்கள் என சிலருக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று பொதி செய்யப்பட்ட உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் அநேக கிராம மக்கள் கலந்து கொண்டு அமரத்துவமடைந்த நல்லதம்பி சங்கரலிங்கம் அவர்களுக்குஅஞ்சலி செலுத்தியதோடு மதிய போசனத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

அன்னாருக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நினைவஞ்சலியினை தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் நிதிப் பங்களிப்பினை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

08.12.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.