;
Athirady Tamil News

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (படங்கள், வீடியோ)

0

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (படங்கள், வீடியோ)

அமரர் ஆறுமுகம் மோகன் மதிகரன் (ஹரன் ) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வில் மதிய உணவு வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது
##################################

யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி மோகன் தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய அமரர் ஹரன் அவர்களது 31 ஆம் நாள் நினவு இன்று 30.12.2021 வியாழக்கிழமை மதியம் தாயக கிராமமான கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்தின் சுற்றாடலில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு அன்னாரின் நினைவு கூறப்பட்டது.

மேற்படி நிகழ்வு கணேச விநாயகர் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் திடீரென பெய்த மழை காரணமாக ஆத்மசாந்தி நிகழ்வு நடைபெறும் இடம் சற்று தூரத்தில் மாற்றப்பட்டு அஞ்சலி வழிபாடும் தானம் வழங்களும் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

மழை தொடந்து பெய்து கொண்டிருந்த போதிலும் கிராமத்து சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்களும் மூதாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். கனடா நாட்டில் நடந்த மிகமோசமான வீதிவிபத்தில் உயிரிழந்த அமரர். ஹரன் என எல்லோராலும் பாசமாக அழைக்கப்படும் மோகன் மதிகரன் அவர்களது ஆத்மசாந்தி நிகழ்வு இன்று மதிய வேளையில் தீபமேற்றி தேவாரபாராயணம் பாடப்பட்டு தீபஆராதனை காட்டப்பட்டு அன்னாரின் குடும்பத்தின் சார்பாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” வயோதிப தாயொருவருக்கு தானம் வழங்கி உணர்வுப்பூர்வமாக அணுஷ்டிக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் நடைபெறும் மேற்படி நிகழ்வுகளுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கோனிக்ஸ் என்னுமிடத்தில் வதியும் லுக்ஸ் அண்ணர் என அழைக்கப்படும் திரு.திருமதி இலக்ஷ்மணன் லலிதா தம்பதிகளின் பிள்ளைகளும், அமரர் ஹரனின் உடன்பிறவா சகோதரங்களுமான செல்வி.லாவண்யா, செல்வி.லக்சனா, செல்வன்.லவன் ஆகியோர் வழங்கியிருந்தனர். அத்துடன் இவர்களின் நிதிப் பங்களிப்பில் மற்றுமோர் வாழ்வாதார உதவியும் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேவேளை மிகவும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நாளாந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்திற்கு, “வாழ்வாதார உதவியாக” நல்லின பசுமாடு பலத்த மழைக்கு மத்தியிலும், இன்றையதினம் சற்றுமுன்னர் கற்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைத்து விசேட ஆத்மசாந்தி பூசையுடன் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பை அமரர் ஹரனின் பெரிய தாயாரான திருமதி.இலட்சுமணன் லலிதா அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (இதுகுறித்த விரிவான செய்திகள், படங்கள், வீடியோ பதியப்படும்.)

இவ்வாறாக பல்வேறு சமூக நற்பணிகளை தாயக உறவுகளுக்கு வழங்கி தமது உடன்பிறவா சகோதரரான அமரர் ஹரன் அவர்களின் முப்பத்தியோராம் நாளை அன்னாரது உறவுகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அனுஸ்டித்தனர்.

அமரர் ஹரன் அவர்களின் ஆத்மசாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

இதேவேளை வாழ்வாதார உதவிகளை வழங்கிய அமரர் ஹரன் அவர்களின் உடன்பிறவா சகோதரர்களுக்கும், உறவுகளுக்கும் நன்றியினையும், தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

30.12.2021

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (வீடியோ)

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.