;
Athirady Tamil News

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர். திரு.சின்னத்துரை சரவணைபவனின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது சகோதரரான புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸில் வசிப்பவருமான திரு.சி.இலக்ஷ்மணன் அவர்களின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பிலும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும், “ஆத்மசாந்திப் பூசைகள், விசேட மதிய உணவுடன் வழங்கப்பட்ட்து.

அதனைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இலங்கை சென்று இருந்த, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” சர்வதேச அமைப்பாளர்களில் ஒருவரும், முகாமைத்துவக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான “உதயன் அல்லது ராஜா” எனும் சமூகசேவையாளன் திரு.குணராஜா உதயராஜா முன்னிலையில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில், வேலணை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.பூராசா அன்பரசி அவர்களின் தெரிவில் உள்ள பயனாளியான மார்பக புற்றுநோய் காரணமாக வாழ்வாதார உதவி வேண்டிய இரண்டு பிள்ளைகளின் தாயான புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரன் ரேணுகா அவர்களுக்கு, “கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதியும்” சமூக சேவகர் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் தலைமையில் வழங்கப்பட்டது.

மேற்படிக் கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதியும் சமூக சேவகர் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் தலைமையில் வழங்கப்பட்ட நிகழ்வில் பயனாளிகளுடன் சமூகசேவையாளன் திரு.உதயராஜா (கனடா), சமூக சேவகர் திரு.பிள்ளைநாயகம் சதீஷ், மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதிப்பொறுப்பாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, மாணிக்கதாசன் நற்பணி மன்ற யாழ்மாவட்ட பிரதிநிதிகளில் ஒருவரான திரு.விமல், திரு.கஜன் மற்றும் பொதுமக்கள் சிலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை அமரர் சரவணபவனின் சகோதரரான திரு.திருமதி.இலட்சுமணன் லலிதா குடும்பத்தினர் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பல்வேறு சமூக நற்பணிகளை தாயக உறவுகளுக்கு வழங்கி தமது அமரர் சரவணபவன் அவர்களின் முப்பத்தியோராம் நாளை அன்னாரது உறவுகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அனுஸ்டித்தனர்.

அமரர் சின்னத்துரை சரவணபவன் அவர்களின் ஆத்மசாந்திக்காக தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

இதேவேளை வாழ்வாதார உதவிகளை வழங்கிய அமரர் சரவணபவன் அவர்களின் சகோதரருக்கும், உறவுகளுக்கும் நன்றியினையும், தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.12.2021

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.