;
Athirady Tamil News

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தென்மராட்சியில் தொடரும் பொங்கல் பொதி வழங்கும் பணி.. (படங்கள், வீடியோ)

0

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தென்மராட்சியில் தொடரும் பொங்கல் பொதி வழங்கும் பணி.. (படங்கள், வீடியோ)

புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரர்.தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக, இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை வழங்கும் செயற்றிட்டத்தினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல் மத்தியில், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் எதிர்வரும் பதின்நான்காம் திகதி வருகிறது.

இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக,

இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புலம்பெயர் வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோரின் ஏற்பாட்டில் கொடிகாமம் அல்லாரை கிராமத்தில் உள்ள சுமார் 15 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

அதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தின் தென்மராட்சியில் பொங்கல் பொதிகள் வழங்கும் பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்றது.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோரின் ஏற்பாட்டில் சாவகச்சேரி, மந்துவில், மீசாலை பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு இன்று காலை பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது.

§§§ நிதிப் பங்களித்தோர் விபரம் §§§

வவுனியாவைச் சேர்ந்தவரும், புளொட் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், புளொட் பிரித்தானியாக் கிளையின் தோழருமான முகுந்தன் எனும் முத்துராஜா முகுந்தன், வவுனியாவைச் சேர்ந்தவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், புளொட் அமெரிக்கக் கிளையின் பொறுப்பாளருமான தோழர்.கோபி;..

கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களான..-யாழ். வசாவிளானைச் சேர்ந்தவரும், சுவிஸ் கிளாரசில் வசிப்பவருமான தோழர்.தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா; யாழ்.வீமன்காமம் தெல்லிப்பளையைச்  சேர்ந்தவரும், சுவிஸ் செங்காலனில் வசிப்பவருமான தோழர்.அசோக் எனும் அசோகராஜா; வன்னியைச்  சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பிரபா எனும் கருணாகரன், யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.பாபு எனும் சித்திரவேல்;

யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ஒபேர்புர்க்கில் வசிப்பவருமான தோழர்.குமார் எனும் கிருஷ்ணகுமார்; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.சிவா எனும் அம்பிகாபதி கலைச்செல்வம்; வவுனியாவைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான தோழர்.தயா எனும் கந்தவேலு தயாபரன்; யாழ்.புங்குடுதீவை சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் ரூபனக்த்தில் வசிப்பவருமான தோழர்.குழந்தை  எனும் கைலாசநாதன்,

யாழ். கல்வியங்காட்டை சேர்ந்தவரும், சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.அன்ரன் எனும் “பரிசுத்த மூப்பர் பிலிப்” ஆகிய திரு.லோகராஜா; யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸில் வசிப்பவருமான தோழர்.மோகன் எனும் பற்பநாதன் அருட்சோதி; யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், சுவிஸ் சொலத்தூணில் வசிப்பவருமான தோழர் லெனின் எனும் செல்வபாலன்,

திருகோணமலை சம்பூரைச் சேர்ந்தவரும் சுவிஸ் சூறிச்சில் வசிப்பவருமான தோழர்.புவி; வவுனியாவைச் சேர்ந்தவரும்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபை உறுப்பினரும், சுவிஸ் ரப்பேர்ஸ்விலில் வசிப்பவருமான தோழர்.ரமணன் எனும் றுஷாந்த்; புங்குடுதீவை சேர்ந்த புளொட் தோழர் சுவிஸ்ரஞ்சன்; ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.01.2022

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தென்மராட்சியில் தொடரும் பொங்கல் பொதி வழங்கும் பணி.. (வீடியோ)

தென்மராட்சியில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பொருட்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

தென்மராட்சியில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.