;
Athirady Tamil News

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்)

0

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்)

புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புப்பேரன் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) வழங்கிய நிதிப் பங்களிப்பில் இன்றையதினம் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவரினதும் குடி தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான இரண்டு தண்ணீர் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டது. (இதுகுறித்த செய்தி மிகவிரைவில் வீடியோ, படங்களுடன் பிரசுரிக்கப்படும்)

இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக, அன்னாரின் அன்புப்பேரன் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) வழங்கிய நிதிப் பங்களிப்பில் இன்று மதியம் இரண்டாவது நிகழ்வாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இன்றைய சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் “கைவிஷேச” காசும் வழங்கப்பட்டது.. (இதுகுறித்த செய்தி மிகவிரைவில் வீடியோ, படங்களுடன் பிரசுரிக்கப்படும்)

இதேவேளை இன்று மதியம் மூன்றாவது நிகழ்வாக வவுனியா எல்லைக் கிராமமொன்றில் விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பெருமளவானோர் கலந்து சிறப்பித்ததுடன், இன்றைய முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வில் அமரர் கனகசபை மீனாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவாரபாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. கனகசபை மீனாம்பாள் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. கனகசபை மீனாம்பாள் அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது பேரனான சுவிஸில் வதியும் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

14.04 2022.

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.