;
Athirady Tamil News

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)
############################

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு திருமதி லோகராஜா ஸ்ரீ ரஞ்சினி தம்பதிகளின் ஏகபுத்திரி செல்வி.ஒமேகா தனது பிறந்தநாளை தனது பெற்றோர், அண்ணாமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

செல்வி ஒமேகா தனது பிறந்த நாளினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா ஈச்சங்குளம் கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி பெறுமதியான உலருணவுப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

செல்வி.ஒமேகாவினது பிறந்த நாள் நிகழ்வினை அவர்களது பெற்றோரின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுடன் வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. செல்வி ஒமேகா அவர்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு செல்வி ஒமேகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் திருமதி. வில்வராசா ஜெயந்தினி (சமுர்த்தி வங்கிச் சங்க உபதலைவர்) அவர்கள் ஒழுங்கமைப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில், தரணிக்குளம் சமுர்த்தி உபதலைவர் திருமதி. நிர்மலச்சந்திரன் சிவரோகிணி, தரணிக்குளம் அறநெறிப பாடசாலை ஆசிரியை செல்வி. பரணிரூபசிங்கம் கஜனா ஆகியோரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சனி மண இணையரின் ஏக புதல்வியான செல்வி ஒமேகா அவர்களது பிறந்தநாள் ஆகிய இன்றையதினம் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு ஒமேகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வழங்கிய நிதிப்பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வி ஒமேகா அவர்களுடைய பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி ஒமேகா அவர்களை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது. அத்தோடு மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு நிதி பங்களிப்பு வழங்கிய செல்வி. ஒமேகாவின் பெற்றோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.07.2022

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.