;
Athirady Tamil News

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ)

0

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ)

புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி” நடவடிக்கையானது, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அந்நிய சக்திகளை நம்பாது, எமக்கென ஓர் பின்தளம் இருக்க வேண்டுமென புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் தெளிவான சிந்தனையில் உதித்த திட்டமே மாலைதீவுப் புரட்சி நடவடிக்கை ஆகும்.

ஈழப் போராட்ட பின்தள அவசியம் பற்றிய, எதிர்கால தேவைக்கான போராட்ட முன்னெடுப்புக்கு மாலைதீவு புரட்சி அவசியமென மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி “பெரியையா” என அனைத்துத் தோழர்களால் அழைக்கப்பட்ட புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

ஈழப் போராட்டம் என்பது சொந்தக் கால்களில் எங்கள் உரிமைகளை வென்றிட வேண்டிய வரலாற்றுக் கடமையினை உணர்ந்த புளொட் செயலதிபர் அவர்களால் மிகசாதூர்யமான நகர்வாக இது அமைந்தது.

புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி” நடவடிக்கையின் போது, மாலைதீவு மற்றும் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் களப்பலியான, கழகக் கண்மணிகளான யாழ்.பண்டத்தரிப்பைச் சேர்ந்த தோழர் வசந்தி எனும் வே.மணிவண்ணன், யாழ். இளவாலையைச் சேர்ந்த தோழர் ஜூலி எனும் செல்லத்தம்பி பத்மசீலன் வீந்திரன், யாழ்.நயினாதீவைச் சேர்ந்த தோழர் நிதி எனும் சோமசுந்தரம் சந்திரபாலன், முல்லைத்தீவைச் சேர்ந்த தோழர் பாப்பா, யாழ். சங்கானையைச் சேர்ந்த தோழர் கோபி, மன்னார் பெரிய குஞ்சுக்குளத்தை சேர்ந்த தோழர் அப்பி, முல்லைத்தீவைச் சேர்ந்த தோழர்.சின்னச்சங்கர், யாழ்.பருத்தித்துறை தும்பனையைச் சேர்ந்த தோழர் குமார் ஆகியோர் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டனர்.

மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் மரணித்த மேற்படி வீரமக்களின் முப்பத்தி நான்காம் வருட நினைவு நாளை முன்னிட்டு, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஊடாக புலம்பெயர் புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் வவுனியா எல்லைக் கிராமமொன்றில் மேற்படி நிகழ்வு நடத்தப்பட்டது. மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில் மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்ட மேற்படி நிகழ்வில்,..

மாலைதீவுப் புரட்சியில் மரணித்தவர்களின் நினைவாகவும், அதில் மரணித்த அனைத்துத் தோழர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அனைத்துத் தோழர்களின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய முப்பத்தி நான்காம் வருட நினைவுநாள் நிகழ்வில் அக்கிராம சிறுவர், சிறுமியர் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இன்றைய மேற்படி நிகழ்வில் பலத்த மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் மறைந்த தோழர்களின் நினைவாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் பொதுமக்களுக்கும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இந்த மாபெரும் மாலைதீவு புரட்சியில் வீர காவியமான தோழர்களின் 34 வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வன்னி எல்லைக் கிராமமொன்றில் வாழும் குடும்பங்களின் மாலைநேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் ஆக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலதிக எதிர்கால வாழ்வாதார உதவியாக தோழர்கள் நினைவாக பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வுகளை மாணிக்காதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கப்பட்டது.

தாயக பிரதேசமெங்கும் தோழர்கள் நினைவாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் மாலைதீவு புரட்சியில் வீரகாவியமான தோழர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துவதுடன் நிதிப் பங்களிப்பு வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள் சார்பாக குறிப்பாக சுவிஸ் தோழர்களான செல்வபாலன், ரமணன், குழந்தை, சூரிச் பாபு, பேர்ண் சிவா, பேர்ண் தயா, ராசன், குணா, தேவண்ணர், புவி, லோகன் எனும் அன்ரன், காந்தன், சுவிஸ்ரஞ்சன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.11.2022

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வாழ்வாதார உதவி..! (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.