சம்மந்தனே உன்னால் முடியாவிட்டால் போ என ஆவேசமாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!!

சம்மந்தனே உன்னால் முடியாவிட்டால் போ என ஆவேசமாக தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
சம்மந்தனே உன்னால் முடியாவிட்டால் போ என ஆவேசமாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது விடுதலை போராட்டமானது பயண்ரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலகிற்கு கொண்டு சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்பிற்கு சவாலாக இருந்ததோடு ஆயுத போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளிற்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களிற்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும்.
இலட்சக்கனக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்காக ஆதரவளிப்பதற்காக அல்ல அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கனக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். இன்று இப் போராட்டம் சரணடையாது உயிர்போனாலும் பகரவாயில்லை என்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல சம்மந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ வேறு யாரும் வருவார்கள்.
நாங்கள் வருவோம் எங்களிற்கென்று ஒரு அனுகுமுறை இருக்கு நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் இருக்கின்றது. உனக்கு முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உனது பாதையென்றால் நீ போ இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள்.
தியாகததின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவுலம் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா