;
Athirady Tamil News

WhatsApp செயலியின் புதிய அப்டேட்..!

0

கணினியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப்(WhatsApp) செயலியானது புதுப்பிப்பு(update) செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன.

அதன்படி, வாட்ஸ் அப் செயலியானது இணைப்பு செய்யப்பட்டுள்ள பிரதான தொலைபேசி வேலை செய்யாவிட்டாலும் அனுப்பப்படும் செய்திகளை கணினி செயலி மூலம் பெறும் வகையில் புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு இப்போது ஒரே WhatsApp கணக்குடன் நான்கு சாதனங்களை இணைக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்ஸ் அப் கணக்கு செயல்படுத்தப்பட்ட முதன்மை சாதனத்தில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், மீதமுள்ள 04 சாதனங்கள் கணக்கான மெட்டாவில் சுயாதீனமாக வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

windows புதிய WhatsApp செயலியானது காணொளி அழைப்பில் 8 பேரையும் சாதாரண அழைப்பு வடிவில் 32 பேரையும் இணைக்க அனுமதிக்கிறது.

நீங்கள் Windows கணினி பயனராக இருந்தால், தரப்பட்டுள்ள பயன்பாட்டிலிருந்து வாட்ஸ் அப் பயன்பாட்டிற்கான சமீபத்திய புதுப்பிப்பைப் பதிவிறக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.