பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று – பீதியில் மக்கள்..!!

அம்பாறை மாவட்டத்தின், கல்முனை பெரிய நீலாவணை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணைப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பலத்த காற்று வீசியதாகவும், காற்று காரணமாக சுமார் 30 வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத், சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்து உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம் ஸியாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.