யாழில் 10 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஐவர் கைது…!!

யாழ் – பருத்தித்துறை – அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டில் கஞ்சா பொலித்தீன் பைகளில் இருந்து வேறாக்கப்பட்டுப் பொதியிடப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கஞ்சாவை கைப்பற்றியதுடன் போதியிடலில் ஈடுபட்டிருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.