வவுனியாவில் போதையினால் கல்வி சீரழிகின்றது மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

வவுனியாவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் மதுகடைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பாலும் இதற்கு எதிராக குரல் எழுபப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், பொலிஸார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போதையால் கல்வியை சீரழிக்காதே, போதையால் பொருளாதாரம் சிதைகின்றது, போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம், புகைத்தலை ஒழிப்போம் புற்றுநோயை தடுப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பாடசாலை அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப்பாவனை குறித்து விளக்கமளித்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

