கோண்டாவில் கிழக்கு ஸ்ரீநாராயணா சனசமூக நிலைய 66ஆம் ஆண்டு விழா இறுதிநாள் நிகழ்ச்சிகள்..!! (படங்கள்)

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீநாராயணா சனசமூக நிலைய 66ஆம் ஆண்டு விழா இறுதிநாள் நிகழ்ச்சிகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.
கோண்டாவில் கிழக்கு ஸ்ரீநாராயணா சனசமூக நிலையம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகம், மாதர்சங்கம், பாலர்பாடசாலை என்பன இணைந்து நடாத்தும் 66ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பரிசளிப்பு விழாவும் கலைநிகழ்ச்சிகளின்
இறுதி நாள் நிகழ்வு நேற்று 21.04.2018 வெள்ளிக்கிழமை மாலை 7.30 அளவில் கோண்டாவில் ஸ்ரீநாராயணா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றன.
இவ்விறுதிநாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ப..கஜதீபன் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கலைஞர்கள் கௌரவிப்பு, வினோத உடைப்போட்டி, வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன. வடமாகாணசபை உறுப்பினருடன், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன் , ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.