கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு..!!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்ட சிசு, கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்தது. அங்கு சிசு உயிரிழந்து விட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. சிசுவின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை உயிரிழந்த சிசுவின் சடலத்தைப் பொறுப்பேற்க பெற்றோர், உறவினர்கள் யாராவது முன்வரும் பட்சத்தில் அவர்களிடம் சடலத்தைக் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
தெரிவிக்கப்படுகிறது.