பாரம்பரிய மாட்டுவண்டிற்சவாரி – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்..!! (படங்கள்)
இளவாலை, சித்திரமேழி. பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய மாட்டுவண்டிச்சவாரி இன்று 14.06.2018 பி.ப 5 மணியளவில் அராலி மாட்டுவண்டிற் சவாரித்திடலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் பாரம்பரிய இனங்களைச்சேர்ந்த காளைகள் கலந்துகொண்டதுடன், வெற்றியீட்டிய காளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாணசபை உறுப்பினருடன், பிரதேச சபை உறுப்பினர்கள், சவாரி ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.