அதிமுக செயற்குழு 20-ம் தேதி கூடுகிறது – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..!!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.