பழங்களுக்கு இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!!

இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழங்களை பழுக்கச் செய்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சகல பிரதேசங்களிலும் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான பழங்களிலும் இரசாயன திரவங்கள் தெளித்து பழுக்கவைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவதால் பழங்களை நம்பி கொள்வனவு செய்கின்ற பெரும்பாலானோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டு அமைச்சுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.