வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாயார்: கொலை செய்ய முயன்ற சிறுவன்..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் லோகன். இவர் பிளே ஸ்டேஷன்-வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ளவர்.
இரவு முழுவதையும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் செலவிடும் வழக்கமுள்ள லோகன், சமீபத்தில் ஃபோர்ட்னைட் என்ற புதிய வீடியோ கேமை விளையாடத் தொடங்கியுள்ளார்.கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் ஒரு கட்டத்தில், இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
லோகனின் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து பேசிய லோகனின் தாய், பிளே ஸ்டேஷன்-4 விடியோ கேம்ஸை வாங்கிக் கொடுக்கும் வரை வெளியில் சென்று விளையாடிக்கொண்டிருந்த லோகன், அதன் பிறகு முழுவதுமாக மாறிவிட்டான்.
உணவு உட்கொள்ளவும், கழிவறைக்கு செல்லும் நேரத்தைத் தவிர முழுக்க முழுக்க வீடியோ கேமில் மூழ்கியிருந்தார் என்று தெரிவித்தார்.
லோகன் தாக்கியதில், அவரது தாய்க்கு தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஃபோர்நைட் என்ற இந்த வீடியோ கேம் பல பேர் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடக் கூடியதாகும்.உலகம் முழுவதும் 12.5 கோடி பேர் இந்த கேமை விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது