ஒரே குடும்பத்தின் மூன்று பேர் விபத்தில் உயிரிழப்பு..!!

பண்டாரகம – கெஸ்பேவ வீதி, வெல்மில்ல சந்திப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஜீப் வண்டியுடன் மோதியுள்ளதுடன், எதிரில் இருந்த தொலைபேசி கம்பம் ஒன்றுடனும் முச்சக்கர வண்டி மோதி விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மருந்து எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.