குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள்!! (படங்கள்)
நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)-
யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
நேற்றுமாலை 5.00மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும், பயனாளிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.