ஹெரோயினுடன் மூவர் கைது!!

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஎளிய, எவரிவத்த பகுதியில் 6 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது குறித்த நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22,21 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.