ராஜித சேனாரத்ன CID யில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று (14) மதியம் 12 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.