இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

வெளிநாட்டு வியாபார கப்பல் ஒன்றில் பயணிக்கும் இலங்கையர்கள் குழுவினர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வணிக கப்பற்றுறை செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் தற்போது எகிப்து நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக வணிக கப்பற்றுறை செயலகத்தின் அத்தியட்சகர் அஜித் செனவிரத்ன எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலின் சேவையாளர்கள் குழுவில் 11 பேர் இருப்பதுடன் அவர்களில் 6 பேர் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்கள் சளி போன்ற சாதாரண நோய் நிலமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவர்கள் எகிப்தை சென்றடைந்ததும் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.