வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு தாக்குதல்: ஆவா குழு!! (படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு தாக்குதல்: ஆவா குழு எனவும் பொறிப்பு
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உஎள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என பொறிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோடடர் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு கேற் முன்பாக பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டு சுவரில் ஆவா 001 என ஸ்பிறே பெயின்ரால் பொறித்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களை அக்கா, அக்கா எனக் கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தினால் வெளியில் வராமையால் கேற் மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிக்குளம் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னௌடுத்துள்ளனர். விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சிறிய பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் பெற்றோல் ஊற்றி கொழுத்தியுள்ளதாகவும் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
பகிடிவதை தாக்குதல்; ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியது ஆவா குழு!!!
அரச உத்தியோகஸ்த்தா் ஒருவாின் வீட்டுக்குள் புகுந்த ஆவா குழு!! (படங்கள்)