கடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் பலி!!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்துமோதர பகுதியில் கடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.
62 வயதுடைய பிரத்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.