யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூட ஆளுநரிடம் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்த பணிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆளுநருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது;
உலக அளவில் பெரும் சவாலாக மாறியுள்ள கோரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து முழு உலகமும் பேசிக்கொண்டிருக்கின்றது. குறித்த வைரஸ் தாக்கத்திலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அந்த அந்த அரசுகள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகின்றமையை அறிவோம்.
அந்த வகையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் கோரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக முன்னேற்பாடாக மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசு 13.03.2020 தொடக்கம் 20.04.2020 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாக இன்று (12) அறிவித்துள்ளது.
இந் நிலையில் அரசின் குறித்த அறிவிப்பின் எதிர்பார்ப்பான மாணவர்களைப் பாதுகாக்கும் முன்னேற்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் தனியார் கல்வி நிலைய கற்றல் நடவடிக்கைகளையும் பாடசாலை மீள் ஆரம்பம் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதுதான் பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
எனவே எதிர்வரும் 13.03.2020 ஆம் திகதி தொடக்கம் 20.04.2020 ஆம் திகதி வரை தனியார் கல்வி நிலையங்களை இடைநிறுத்தி மாணவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தங்களை தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
வவுனியாவில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி!!
கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!
கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)
வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)