மெக்சிகோவில் கொரோனாவுக்கு முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் இன்று பலியாகியுள்ளார். மேலும், 118 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.