கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இன்று முதல் வெலிகந்த மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த வைத்தியசாலைகளில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த வைத்தியசாலைகளில் இன்று முதல் அங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதனிடையே, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தொற்றுநோயியல் நிறுவகத்தில் விமானப்படையினரால் மற்றுமொரு விடுதி அமைக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டாலும் 21, 22 ஆம் திகதிகளைத் தவிர ஏனைய நாட்கள் அரசாங்க விடுமுறையாகக் கருதப்படாது என ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாவட்ட செயலகங்களினதும், பிரதேச செயலகங்களினதும் கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றுநிரூபத்தில் கூறப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!
இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!