கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் கொரோனா வைரஸ் குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இந்தியாவில் இருந்து 210 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், இன்று (சனிக்கிழமை) காலை முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் 29 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கில் இரணைமடு விமான நிலையம், கேப்பாப்பிலவு விமான நிலையம், பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் விமானப்படையினரால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!