ஊரடங்கு அமுலில் மலையக நகரங்கள் மற்றும் தோட்டங்களிவல் மயான அமைதி.!! (படங்கள்)
கோவிட் 19 என்ற கொரானா வைரஸ்சினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து மலையக நகரங்கள் முறு;றும் தோட்டங்களில் மயான அமைதி நிலவி வருகிறது.
இன்று காலை முதல் அத்தியவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் ஓரிரண்டு சேவையில் ஈடுப்பட்டன.நகரங்களில் பொலிஸ் மாத்திரம் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.
தோட்டத்துறையும் செயலழிந்து காணப்பட்டன் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் தொழிலாளர்கள் எவரும் வேலைக்கு செல்லவில்லை.
அத்தியவசிய தேவை கருதி பெற்றோல் நிரப்பு நிலையங்கள் ஒரு பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க திறக்கப்பட்டிருந்தன.
ஏனைய அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.இதே வேளை வைத்தியசாலைகளில் பணிகள் வழமை போன்று இடம்பெற்றன.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அவசர நோயாளர் பிரிவு வழமை போல இயங்கின.
இந்த காலப்பகுதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று சந்தேகத்துக்கிடமான எவரும் வரவில்லை என அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதே நேரம் நேற்று ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பெரும்பாலானோர் மலையகங்களை நோக்கி வருகை தந்துள்ளமையினால் இந் நோய் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு வருகை தந்தவர்கள் தங்களது குடும்பத்தின் நலன் கருதி 14 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு சுகாதார துறையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையக பகுதிகளுக்கு எந்த நோய் பரவுமேயானால் இத பாரிய அளவில் மிக வேகமாக பரவுவதற்கு வாய்ப்பிருப்பதனால் அனைவரும் அவதானமாக செயப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!