நிவாரணம் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் – ஆறுமுகன் தொண்டமான்!!

மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
“கொரோனா” வைரஸ் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று (21.03.2020) அன்று அட்டனிலுள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அலுவலகத்தில் அமைச்சர் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் தலைவர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பொலிஸார் என உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சின் ஊடாக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
நாளையும் (22) கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபை தலைவர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். பெருந்தோட்டப்பகுதிகளில் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகள் தேவையோ அவை அனைத்தும் எனது அமைச்சின் ஊடாக வழங்கப்படும்.
அதேவேளை, தை பிறந்தால் வழி பிறக்கும் என நான் கூறியிருந்தேன். இதன்படி ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளத்துடன் ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்.
நாட்டில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்றது. பொலிஸ் ஊரடங்குச்சட்டமும் அமுலில் உள்ளது. அதற்கான நிவாரணமும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!