யாழ் போதான வைத்திசாலை பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு..!!

யாழ் போதான வைத்திசாலை பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அவசரப்பட்டு பதட்டத்தோடு உண்மையை உறுதி படுத்தாமல் செய்திகளை வெளியிடுகினறீர்கள் பரிமாறுகின்றீரகள். எல்லோரையும் பதட்டமான நிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள்.
அரியாலைப் பகுதியில் பிரார்த்தனை நடத்திய மதகுருவுக்கு தொற்று இருப்பது பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்து சேரவில்லை.
அவருக்கு தொற்று இருந்தாலும் இங்கு பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.
அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால் இங்குள்ள ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
தொற்று ஏற்பட்டிருக்கும் ஒரு சிலரும் எந்தவிதமான நோய் அறிகுறியும் காணப்படாமல் இருக்கலாம்.
மத குருவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரோடு நேரடியாக தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களது வீட்டில் இரண்டு கிழமைகள் தனியாக இருந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறானவர்களினள் சுவாச வியாதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டு வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரோடு நேரடி தொடர்பு கொண்ட ஒருவருக்கு சுவாச மற்றும் அதனோடு தொடர்புடைய வியாதிகள் ஏற்படுகின்றபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொற்று இருக்கின்றதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் பல்வேறு நோய்களினால் வருகின்ற சுவாச வியாதிகள் ஏனைய வியாதிகளுக்கு பொதுமக்கள் வைத்தியசாலைக்கு செல்லாத நிலை ஏற்பட்டு அசௌகரியமான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புண்டு.
த.சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
யாழ்.போதனா வைத்தியசாலை
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!