மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!! (படங்கள்)
நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடரங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவதுடன், வாகனங்களை கைப்பற்றுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே, இக்காலப்பகுதிகளில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் டயகம, அக்கரபத்தனை, லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, பூண்டுலோயா, கொத்மலை, திம்புள்ள – பத்தனை, அட்டன், வட்டவளை, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய தோட்டப்பகுதிகளிலும் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தலவாக்கலை நகரில் பேருந்து தரிப்பிடம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை தலவாக்கலை –லிந்துலை நகர சபையால் இன்று (22.03.2020) முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை மற்றும் லிந்துலை பகுதிகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதார பிரிவினர் பணியில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!