கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நோயாளிகள் நாட்டின் பல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு மேலதிகமாக தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் 245 பேர் நாடு பூராகவும் உள்ள 18 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நாட்டின் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு தனிமைப்படுத்தல் நிலையங்கள் 22 இல் 3063 பேர் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கொவிட் 19 வைரஸை தடுக்கும் செயற்பாட்டு குழு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு இடையில் உள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவு, புலனாய்வு பிரிவு, இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் உள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக நாடு பூராகவும் 30 வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. .
தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இனம் காணப்படும் தோற்றாளர்கள் அங்கொடை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!