வைரசை தடுக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!! சத்தியலிங்கம்!!

கொரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் வடமாகாண சுகாதாரஅமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் ஆளுனருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
கொறோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருவது பாராட்டிற்குரியது.
இலங்கையில் நோய் வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே புத்திசாலித்தனமானது. ஏனெனில் கொறோனா வைரஸ் நோய் தாக்கத்தினால் மூச்சுத்திணறல் நிலை ஏற்படுமானால் எமக்குள்ள அவசர சிகிச்சை பிரிகளின் எண்ணிக்கை அங்கு கடமையாற்றும் பயிற்றப்பட்ட சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய வசதிகளை எடுத்து நோக்கினால் நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு நிச்சயமாக விடைதேட முடியாது என்பதே உண்மை.
எனவே மக்கள் நலன்சார்ந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளிற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது இன்றியமையாததகின்றது.
ஊரடங்கின் அர்த்தம் புரிந்தும் புரியாதவர்களாக
ஊரங்கை மீறுவது கெட்டிக்காரத்தனம் என நினைப்பவர்களும்
ஊரடங்கு வேளைகளில் வெவ்வேறு அத்தியாவசியமற்ற காரனங்களை கூறிக்கொண்டு வீட்டைவிட்டு வெளிவருபவர்களும்
ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொருட்களை வாங்கும் நோக்கில் முண்டியடித்துக்கொண்டு சுகாதார விதிகளை மீறி ஒன்றுசேரும் செயற்பாடுகள் மக்களும் இந்தநாடும் இன்னும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய அழிவை புரிந்துகொள்ளவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.
எனவே கெளரவ ஆளுநர் அவர்கள் சிலநடைமுறைகளை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
1. வடக்கு மாகாணம் முழுவதும் சனத்தொகை மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்து வலயங்களாக பிரிக்கப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு வலயங்களிலும் காணப்படும் தனியார் மற்றும் அரச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும், அ-து அங்கு வாழும் மக்கள் தொகைக்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
3. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் பொலிசாரின் உதவியுடன் சம்மந்தப்ட்ட வலயங்களில் வாழும் மக்கள் அந்தந்த வலயங்களிலேயே பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. அவசர மருத்துவ நிலைகளிலும் ஏனைய அவசர சந்ததர்ப்பங்களிலும் மட்டும் குறிப்பிட்ட வலயங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறான மக்கள் நலன்சார் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதால்
நோய் பரம்பலை குறிப்பிட்ட வலயத்தினுள் கட்டுப்படுத்துவதுடன் தடுப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த முடியும்.
ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் அனாவசியமாக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தி நோய்ப்பரம்பலை கட்டுப்படுத்தலாம். கெளரவ ஆளுனர் அவர்கள் மேற்படிவிடயங்களை கவனத்தில் எடுத்து கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!