அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி புரியும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை தவிர அனைத்து அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியினை அரசாங்க பொது விடுமுறையாக கருதாமல், பொது சேவையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்தே பணி புரியும் வாரமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)