பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகள் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் முன்னெடுத்த சோதனையின் போதே அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
எனினும் ஸ்ரான்லி வீதியில் உள்ள குறித்த உணவகத்தின் பின்கதவு திறந்திருந்த நிலையில் அதற்குள் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத கோழி இறைச்சி, ரொட்டி மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுகளை மீட்டனர்.
யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பாவனைக்குதவாத உணவுகள் உடனடியாக அழிக்கப்பட்ட தோடு, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் தெரிவிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!