மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பதிவான மூன்றாவது மரணத்தையடுத்து, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்தின் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் உள்நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டு பொலிஸ், அதிரடிப்படை மற்றும் இராணுவ பாதுகாப்பு பலபப்டுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இலங்கையில் பதிவான 3 ஆவது மரணத்தை தழுவியவர் மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தையை வசிப்பிடமாக கொண்டவர் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பகுதி முடக்கப்பட்டது.
இந்நிலையில். உயிரிழந்த நபருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த 300 பேரை அடையாளம் கண்ட சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பு அவர்களை மட்டக்களப்பு, புனானை தனிமைப்படுத்தல் மையத்துக்கு, தொற்று நீக்கல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றதாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்தார். இவர்கள் இன்று (02) மாலை மருதானையிலிருந்து இராணுவத்தின் பஸ்களில் மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் அந்த பகுதியில் பல தொடர்மாடிகள் மற்றும் வீடுகளில் வசிக்கும் 220 குடும்பங்களைச் சேர்ந்த 1. 400 பேரை அவரவர் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!
யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!