முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை வழங்கப்படவுள்ளது!!

முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள கொடுப்பனவை நாளை (06) முழுமையாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு தலா 5000 ரூபா அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.
தற்போது கொடுப்பனவுகளை பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அவர்களில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000 ரூபா கொடுப்பனவை நாளை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேபோல், தற்போது 2000 ரூபாவை முதியோர் கொடுப்பனவாக பெறும் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மேலதிகமாக 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவாக 5000 ரூபா நாளை வழங்கப்படவுள்ளது.
அதேபோல், காத்திருப்பு பட்டியலில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முதியோர் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து கொடுப்பனவுகளையும் கிராம சேவகர்களூடாக நாளை பயனாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு, கடற்றொழில் ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றை செலுத்துவது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 02 ஆம் 03 ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாது போனவர்கள் நாளை அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)
கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)
கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!
இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!
அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!
வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!
கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!