அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)
வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்தார்.
9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.
இம்முறை தேர்தலில் தமிழ்மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் உறுதிமிக்க அரசியல் தலைமைத்துவம் ஒன்று வரும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்!! (வீடியோ, படங்கள்)