கல்வியியல் கல்லூரியில் இணையும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறு களுக்கு அமைய இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான வர்த்தமானி இன்று வெளியிடப்படவுள்ளது.
www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக இதற்கான விண்ணப்பங் களைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இந்நிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல் கள் தொடர்பில் 011 2 78 73 03, 011 2 78 73 85 , 011 2 78 73 93 011 2 78 73 99 அல்லது 011 2 78 74 44 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற் கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.
நாடளாவிய ரீதியில் காணப்படும் 19 கல்வியியல் கல்லூரிகளில் 50 கற்கை நெறிகளுக்காக இம்முறை 4,253 பேர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.